4.1.11 அஃதே உய்ய - Rise from deep despair!

பாசுரம்:

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,
கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,
செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,
அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.

Audio Introduction:


Translation:

Sung towards Kannan's feet to seek those solaces,
this decad of the beautiful thousand verses,
by Satakopan of Kurugur with dense flower terraces,
shall rise from deep despair and succour its true learners.


பதம் பிரித்தது:

அஃதே உய்யப் புகுமாறு என்று கண்ணன் கழல்கள் மேல்,
கொய் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்,
செய்கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்,
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர் போய் உய்யப் பாலரே.

பொழிப்புரை:

உய்வதற்கு உரிய வழி மேலே கூறிய அதுவே என்று கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, பறிக்கப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலையாற்சூழப்பட்ட திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அந்தரங்கக் கைங்கரிய ரூபமாகச் செய்யப்பட்ட அழகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இறைவனுடைய கல்யாண குணங்களைத் தொடுத்துப் பாடிய இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் குறைவில்லாதவாறு கற்பவர்கள், ஆழ்ந்துள்ள துன்பங்கள் நீங்கி நற்கதி பெறுவார்கள்

விளக்கம்:

‘உய்யப் புகுமாறு அஃதே என்று கண்ணன் கழல்கள் மேல் சடகோபன் குற்றேவல் பாடல் இவை பத்தும் கற்றவர் துயர் போய் உய்யற்பாலர்,’ என்க.

4.1.10 குறுக மிக - Even Saints need Him

பாசுரம்:

குறுக மிகவுணர் வத்தொடு நோக்கியெல் லாம்விட்ட,
இறுக லிறப்பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லையேல்,
சிறுக நினைவதோர் பாசமுண்டாம்பின்னும் வீடில்லை,
மறுபகலில் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே

(கலி நிலைத்துறை)

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Nonchalant and with vision towards his élan vital
the Saint has become a mortal.
Yet without Him, he's caught in the confines of his soul,
So, hold on to the eternal Lord's feet for that Paradise Real.


பதம் பிரித்தது:

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம்விட்ட,
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயனில்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை,
மறுபகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் வீடஃதே.

பொழிப்புரை:

(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும்

விளக்கம்:

1.  ‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க.
2.  உணர்வு - ஞானம்; ஆத்துமா.
3.  இறுகல் - இறுகப்பிடித்தல்.
4.  இறப்பு - மோக்ஷம்.
5.  பாசம் - பற்று.
6.  மறுகல் - குற்றம்.
7.  ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக.
8.  இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை.
9.  ‘அஃதே வீடு’ என மாறுக.

4.1.9 படிமன்னு - No permanent heaven without Him

பாசுரம்:

படிமன்னு பல்கலன் பற்றோடறுத்துஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற்றார்களு மாங்கவ னையில்லார்,
குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியுமீள்வர்கள் மீள்வில்லை,
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

Audio Introduction:



Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Devoid of desire for Ornaments with the senses subdued
Cycle of Rebirth is Conquered  - Yet not being His favoured,
though attaining heaven is attained - staying there isn't endured 
Ergo, reach for the Garuda-banner adorned Lord

பதம் பிரித்தது:

படிமன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து, ஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனைஇல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

பொழிப்புரை:

பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.

விளக்கம்:

1.  ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. 
2.  ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.
3.  படி - பூமி. 
4.  மன்னு பல்கலன் - முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம்

4.1.8 குணங்கொள் - No Permnent bliss without him

பாசுரம்:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர்க் கொடைக்கடன் பூண்டிருந்து,
இணங்கி யுலகுட னாக்கிலும் ஆங்கவ னையில்லார்,
மணங்கொண்ட போகத்து மன்னியு மீள்வர்கள் மீள்வில்லை,
பணங்கொள் அரவணை யான்திரு நாமம் படிமினோ.

Audio Introduction:


Click -> here <- for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

Virtuous, famed and altruist by inherent demeanour
Compatible with Everyone - yet without Him in his favour
Fragrant bliss will engulf them only to expire.
Learn the names of the serpent-couch Lord, for bliss of no-expire!


பதம் பிரித்தது:

குணங்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும்,ஆங்கு அவனைஇல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
பணங்கொள் அரவணையான் திருநாமம் படிமினோ.

பொழிப்புரை:

நல்ல குணங்கள் பொருந்திய நிறைந்த புகழையுடைய மன்னர்கள் தர்மம் செய்தலாகிய கடமையை மேற்கொண்டு உலகத்தாரோடு பொருந்தி இருந்து உலகத்தை எல்லாம் தமக்கே உரியதாகச் செய்து அரசாண்டாலும், அந்த அரசச் செல்வமானது இறைவன் திருவருளால் வந்தது என்று நினையாதவர்கள், செவ்வையையுடைத்தான இன்பத்திலே நிலைபெற்று இருப்பவர்களாயினும், அந்த இன்பத்தினின்றும் நீங்குவார்கள்; ஆதலால், படத்தைக்கொண்ட பாம்பினைப் படுக்கையாகவுடைய இறைவனது திருநாமத்தைப் படியுங்கோள் ; அங்ஙனம் கூறினால், பின்னர் மீண்டு வருதல் இல்லை ; அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டினை அடையலாம்

விளக்கம்:

1.  ‘மன்னர் கொடைக்கடன் பூண்டு இணங்கி இருந்து உலகு ஆக்கிலும்’ எனக் கூட்டுக.
2.  ‘திருநாமம் படிமின் ; மீள்வில்லை,’ என்க.
3.  படித்தல் - கற்றல். ஆனால்,
4.  ‘திருநாமம் படிமின் - கல்யாண குணங்களாகிய கடலில் மூழ்குங்கோள்’ என்னலுமாம்.
     ‘நற்குணக்கடல் ஆடுதல் நன்றரோ,’ என்றார் கம்பநாட்டாழ்வார்.

4.1.7 ஆமின் சுவை - From abundance to morsels

பாசுரம்:
ஆமின் சுவையவை ஆறொடடிசிலுண் டார்ந்தபின்,
தூமென் மொழிமட வாரிரக்கப்பின்னும் துற்றுவார்,
ஈமின் எமக்கொரு துற் றென்றிடறுவ ராதலின்,
கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே.

Audio Introduction:


Click here to listen to an explanation of the pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:

After flavorous abundant meal having been consumed
when courtly dames insist - yet more was crammed.
Ah! "Provide me a morsel" - says he now - against doors slammed.
So, portray the glories of our Primal Lord who is Basil Domed.

பதம் பிரித்தது:

ஆமின் சுவைஅவை ஆறோடு அடிசில்உண்டு ஆர்ந்தபின்
தூமென் மொழிமட வார்இரக் கப்பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்குஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதிஅம் சோதி குணங்களே.

பொழிப்புரை:

பொருந்திய இனிய அந்த அறுசுவையோடு கூடின உணவை உண்டு வயிறு நிறைந்த பின், தூய்மை பொருந்திய மெல்லிய சொற்களைப் பேசுகின்ற பெண்கள் இரந்து கூறப் பின்னரும் உண்பார்கள் ; அவ்வாறு உண்டவர்கள், அந்நிலை கெட்டு, ‘எமக்கு ஒரு பிடி அன்னம் கொடுமின்,’ என்று தட்டித் திரிவார்கள் ; ஆதலின், திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய ஆதி அம் சோதியான இறைவனுடைய கல்யாண குணங்களை அனுபவிக்கப் பாருங்கோள்

விளக்கம்:

1.   ‘ஆம் இன் அவை ஆறு சுவையோடு அடிசில் உண்டு’ எனப் பிரித்துக்கூட்டுக.
2.   தூ - பரிசுத்தம்.
3.   துற்றல் - உண்டல்.
4.   துற்றுவர் - பெயர்.
5.   ‘துற்றுவர் இடறுவர்’ என முடிக்க.
6.   இடறுவர் - முற்று (knocks the doors).
7.   கோமின் - தொகுத்துச் சொல்லுமின்.
8.   ‘குணங்கள் கோமின்’ என மாறுக.

4.1.6 வாழ்ந்தார்கள் - Life is like a bubble!

பாசுரம்:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,
ஆழ்ந்தாரென் றல்லால் அன்று முதலின் றறுதியா,
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென் பதில்லை நிற்குறில்,
ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

Audio Introduction:



Click here for an explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan (Eedu Vyakyanam)

Translation:
The Living lead a life like the bubbles in a torrent
Never stable - be assured - from the past till the present
Life isn't ever lasting - so if you desire eternity
Submit to the Lord, reclined in the deep sea ,with servility!

பதம் பிரித்தது:

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தார்என்று அல்லால், அன்றுமுதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர்என்பதுஇல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.

பொழிப்புரை:

வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகிற குமிழி போன்று அழிந்து நரகத்திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அது அல்லாமல், அன்று முதல் இன்று வரையிலும் வாழ்ந்தவர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பது இல்லை; ஆதலால், நிலை பெற்ற பேற்றினைப் பெறவேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறைவனுக்கு அடியவர் ஆகுங்கோள்

விளக்கம்:

1.  ‘வாழ்ந்தது மொக்குளின் மாய்ந்துமாய்ந்து ஆழ்ந்தார் என்பதே;
     அது அல்லால், வாழ்ந்தே நிற்பர் என்பது
2.  அன்று முதல் இன்று அறுதியா இல்லை ; ஆதலால், நிற்குறில், அண்ணல் அடியவர் ஆமின்,’ என்க.
3.  ‘நிற்குறில்’ என்பது, நிற்க உறில் என்பதன் விகாரம். (if you desire eternity)

4.1.5 பணிமின் - From Soft Mattress to Loin Cloth

பாசுரம்:

பணிமின் திருவருள் என்னும்அஞ் சீதப் பைம்பூம்பள்ளி,
அணிமென் குழலார் இன்பக்கலவி அமுதுண்டார்,
துணிமுன்பு நாலப்பல் லேழையர் தாமிழிப் பச்செல்வர்,
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

Audio Introduction:



Click here to listen to a explanation of this pasuram by Dr. M.A. Venkatakrishnan

Translation:

They once ate the nectar of love with dames of tender coiffure
Upon cool soft mattresses uttering "Render me a favour!"
Alas, they are now object of ridicule with barely a loin cloth as cover!!
So conduct thy life chanting the names of our Gem  Sparkling Conjurer.


பதம் பிரித்தது:

"பணிமின், திருவருள்"என்று அம் சீதப் பைம் பூம் பள்ளி,
அணி மென் குழலார் இன்பக்கலவி அமுது உண்டார்,
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்,
மணி மின்னும் மேனி நம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.

பொழிப்புரை:

"திருவருள் புரிதல் வேண்டும்" என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய குளிர்ந்த பரந்த பூக்களாலான படுக்கையிலே சேர்க்கையால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள், அந்நிலை கெட்டு, துணி முன்னே தொங்கவும் பெண்டிர் பலர் இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால், நீலமணி போன்று பிரகாசிக்கின்ற திருமேனியையுடைய நம் மாயவனது திருநாமத்தைச் சொல்லி வாழுங்கோள்

விளக்கம்:

1. ‘என்னும் குழலாரோடு பூம்பள்ளியிலே இன்ப அமுது உண்டார்’ என்க.
2.  உண்டார் - பெயர்.
3.  ‘உண்டார் செல்வர்’ என முடிக்க.
4.  ‘நால இழிப்பச் செல்வர்’ என்க. (go around wearing nothing but loin-cloth)
5.  செல்வர் - முற்று.
6. இப்பாசுரத்திற்குப் பட்டர் அருளிச்செய்யும் வியாக்கியானம் இன்பச் சுவையிலே தோய்ந்தது; நவில்தொறும் இன்பம் பயப்பது. ‘அம் சீதம் பைம்பூம்பள்ளியிலே கிடக்கும் அணி மென்குழலாரைப் பார்த்துத் ‘திருவருள் பணிமின்’ என்னும்  இன்ப அமுது உண்டார்’